உலக அளவில் இதுவரை 1,202,242 கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 64,729 உயிரிழந்துள்ளனர். 246,638 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 200 மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.
இந்நிலையில் மனிதர்களிடம் மட்டுமே தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது விலங்குகளையும் தாக்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் Bronx Zoo-வில் உள்ள புலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல் முறையாக ஒரு விலங்கிற்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் உள்ள மேலும் 6 புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரில் பூங்காவில் பணியாற்றிய ஊழியரிடம் இருந்து விலங்குகளுக்கு பரவி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
BREAKING: A tiger at the Bronx Zoo has tested positive for Covid-19. 6 other tigers and lions at the zoo are also showing symptoms. Believed to have been infected by an asymptomatic zoo worker. All doing well. To my knowledge, this is the first animal to test positive in the U.S.
— Natasha Daly (@natashaldaly) April 5, 2020