பெற்றோரை கண்ணீரில் விடைதெரியாது தவிக்கவிட்டு, சிறுமி எடுத்த விபரீத முடிவு..

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அறிவொளி நகர் பகுதியை சார்ந்தவர் பிரபு. இவரது மகளின் பெயர் பூவிகா (வயது 13). பூவிகா அப்பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இவர் கரோனா விடுமுறை காரணமாக சிறுமி வீட்டில் இருந்த நிலையில், திடீரென வீட்டில் இருந்த சாணி பவுடரை குடித்து மயக்கமடைந்து விழுந்துள்ளார். இவரை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், சிறுமியை மீட்டுள்ளனர்.

இவரை மீட்ட பெற்றோர்கள் அங்குள்ள மேலப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதி செய்துள்ளனர். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.