முதுகு வலி ஏற்பட்டால் இதையெல்லாம் செய்யாதீங்க!

இன்றைய பெரும்பாலும் நாம் உட்கார்ந்தே தான் வேலை செய்கிறோம். கால்களுக்கும், கைகளுக்கும் சரியான வேலை தருவதே இல்லை.

உட்கார்ந்தே வேலை செய்வதால் இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது. இதை தான் இடுப்பு வலி என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இடுப்பெலும்பு என்பது உங்கள் வயிற்றின் மிக அடிப் பகுதியாகும் (அடிவயிறு). இடுப்பெலும்பானது உங்கள் குடல், சிறுநீர்ப்பை, கருப்பை (கர்ப்பப்பை) மற்றும் கருப்பைகள் ஆகிய உறுப்புகளை உள்ளடக்கும்.

இடுப்பெலும்புக்குரிய வலி, பொதுவாக இந்த உறுப்புகளுள் ஒன்றிலிருந்து தொடங்குகின்றது. சில சமயங்களில் இந்த உறுப்புகளுக்கு அருகிலுள்ள இடுப்பெலும்பு அல்லது அருகிலுள்ள தசைகள், நரம்புகள், இரத்த நாளங்கள் அல்லது மூட்டுகளில் இருந்து வலி ஏற்படுகிறது. எனவே, இடுப்பெலும்புக்குரிய வலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன.

இடுப்பெலும்பு வலி பொதுவாக ஆண்களை விட பெண்களில் அதிகம் ஏற்படுகிறது. இடுப்பெலும்புக்குரிய வலி கடுமையானதாக அல்லது ரொம்ப நாளாக வலி இருந்தால் மருத்துவரை பார்க்க வேண்டும்.

  • கீழ் முதுகு வலி ஏற்பட்டால் நடப்பது, நிற்பது, உட்கார்ந்தே இருப்பது போன்ற வேலைகள் செய்ய வேண்டாம். முடிந்த வரை கால்களை நேராக நீட்டி படுத்து ஓய்வெடுங்கள். இடுப்பு உங்கள் கீழ் உடல், மேல் உடலை இணைத்து இருப்பதால் இதுப் போன்ற வேலைகள் வலியை அதிகரிக்கும்.
  • இடுப்பு வலி இருக்கும் போது உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், இடுப்பு வலி இருக்கும் போது உடற்பயிற்சி செய்யக்கூடாது. இடுப்பு வலி முழுமையாக குறையும்போது உடற்பயிற்சிகளை செய்யலாம்.
  • உடனே வலியை குறைக்கும் நிவாரணத்தை தேடுவதை நிறுத்த வேண்டும். இவை, அந்த நேரத்திற்கு மட்டுமே தீர்வு தருமே தவிர, நிரந்தர தீர்வை கொடுக்காது.
  • ஒரே சிகிச்சையை பின்பற்ற கூடாது. 85% இடுப்பு வலி என்ன காரணத்தினால் ஏற்படுகிறது என்றே தெரியாமல் தான் ஏற்படுகிறது. எனவே, எங்கு பிரச்சனை, எதனால் வருதுன்னே தெரியாமல் நீங்களாக சுயமாக எந்த சிகிச்சையையும் செய்ய கூடாது.
  • அதிக எடை கொண்ட பொருட்களை தூக்க வேண்டாம். மார்கெட், அலுவலகம், வீடுகளில் அதிக எடை கொண்ட பொருட்களை தூக்காமல் இருப்பது நல்லது. அப்படி செய்தால் இது மேலும் இடுப்பு வலி அதிகரிக்கும்.
  • மீண்டும் மீண்டும் குனிந்து, குனிந்து வேலை செய்ய வேண்டாம். இது உங்கள் இடுப்பு பகுதியில் அதிக அழுத்தத்தை கொடுக்கும். வலியை அதிகரித்து விடும்.
  • நீங்களாக சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, ஐஸ் வைத்து தேய்ப்பது என எதையும் செய்ய கூடாது. இவை அந்த நேரத்திற்கு இதமாக இருக்கும். ஆனால் முழுமையாக தீர்வு கொடுக்காது.