கொரோனா பாதிப்பிற்கு தமிழக அரசிற்கு லட்சக்கணக்கில் வாரி வழங்கிய நடிகர்..!!

கொரோனாவால் தற்போது உலக மக்கள் அனைவரும் மிக பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும் இந்தியாவிலும் இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.

இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலே இருக்குமாறு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. மேலும், அனைவரும் நிதியுதவி அளிக்குமாறு மத்திய அரசின் சார்பாக வேண்டுகோள் விடுத்தனர்.

அதனை தொடர்ந்து இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி பிரபலங்களும் இதற்கு முன் வந்து தங்களால் முடிந்த நிதியுதவி அளித்தனர்.

தற்போது நடிகர் சிவா கார்த்திகேயன் தமிழக அரசிற்கு 25 லட்சம் ரூபாய்யை கொரோனா நிதியுதவியாக அளித்துள்ளார்.

மேலும், இவர் இதற்கு முன் FEFSI யில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூபாய் 10 லட்சத்தை நிதியுதவியாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.