கொரோனாவை விரட்டியடிக்கும் இயற்கை உணவு பொருள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. ஆனால் இதுவரை அதற்குத் தடுப்பு மருந்து ஏதும் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான மருந்து குறித்தும் பாதுகாப்பாக இருப்பதும் குறித்தும் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

இதில் மிகவும் ஆபத்தானது முதல் ஆபத்தில்லாதது வரை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் பெரிதும் பகிரப்படுவது, கொரோனாவிலிருந்து தப்பிக்க பூண்டு சாப்பிடுங்கள் என்பது ஆகும்.

தமிழர்களின் உணவுகளின் பயன்படுத்தப்படும் இயற்கை உணவு பொருளில் பூண்டும் ஒன்று. பூண்டு சாப்பிடுவது நல்லது . அதில் நுண்ணுயிரை எதிர்க்கும் தன்மையுடையது.

ஆனால் அதை சாப்பிட்டால் புதிய கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இது போன்ற மருந்துகள் ஆபத்தானவை இல்லை. ஆனால் மருத்துவ ரீதியாக இவை கொரோனா பாதிப்பில் இருந்து காப்பாற்றும் என்பதும் இல்லை.

தி சௌத் சைனா மார்னிங் போஸ்ட், என்ற சீனப் பத்திரிகை ஒரு பெண் 1.5 கிலோ பூண்டை சாப்பிட்டதால் தொண்டை எரிச்சல் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுவாக காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவதும், தண்ணீர் நன்றாக குடிப்பதும் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆனால் இந்த குறிப்பிட்ட உணவு இந்த வைரஸிலிருந்து காப்பாற்றும் என்று எதுவும் இல்லை.

இதேவேளை, ஒரு வைரஸை கொல்ல 60 டிகிரி வெப்பநிலை தேவை. இதனால் துணி துவைக்க 60 டிகிரி வெப்பநிலையுள்ள நீரை பயன்படுத்துவது நல்ல யோசனை. ஆனால் நாம் 60 டிகிரி வெப்பநிலை கொண்ட நீரில் குளிப்பது நல்லது கிடையாது. வெந்நீரில் குளிப்பது, வெந்நீர் குடிப்பது போன்றவற்றால் நம் உடலின் வெப்பநிலை மாறாது.
எனவே பொய் வதந்திகளை நம்பாது விழிப்புணர்வுடன் இருக்கவும்.