வேற்று சாதி இளைஞரை காதலித்த மகள்… தந்தையின் வெறிசெயல்..!!

வேற்று சாதி இளைஞன் ஒருவனை தனது மகள் காதலித்ததை ஏற்கமுடியாமால் அவமானத்தில் ஒட்டு மொத்த குடும்பத்தையும் சுத்தியல் கொண்டு அடித்து கொடூரமாக கொலை செய்த தந்தையின் கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரிஜேஷ் திவாரி என்பவர், சிறப்பு பிரிவில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிப்புரிந்து வந்துள்ளார்.  பிரிஜேஷ் திவாரிக்கு குஷ்பூ என்ற மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், திவாரியின் மகள் குஷ்பூ மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞனை காதலித்து வந்துள்ளார். இந்த தகவல் அறிந்த பிரிஜேஷ் திவாரி மனவேதனை அடைந்து அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் இருப்பவரிடம் சண்டையிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, சம்பவத்தன்று திவாரி வேலை முடித்து வீடு திரும்பினார். அப்போது அவர் முழுவாதும் குடித்து விட்டு வந்துள்ளார். அதன் பின், அவர் வீட்டில் உள்ள அனைவரிடமும் சண்டையிட்டுள்ளார். கோபம் அடங்காத அவர் ஆத்திரத்தில் சுத்தியலால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.