5 நாட்களில் 5000 ஓட்டகங்களை சுட்டுக் கொன்ற அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலியாவில் கடும் வறட்சி காரணமாக ஒட்டகங்களை கொல்லும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில், தற்போது வறண்ட சூழ்நிலை காணப்படுகிறது. நாட்டின் வனப்பகுதிகளில், தண்ணீர் இல்லாமல் போனதால், அடிக்கடி காட்டுத்தீ உருவாகி வருகிறது.

தெற்கு அவுஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் ஃபெரல்வகை ஒட்டகங்கள், கடுமையான வறட்சி காலங்களில் தண்ணீரை அதிகம் குடிப்பதாகக் கூறி சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல அவுஸ்திரேலியா அரசு முடிவு செய்தது. ஐந்து நாட்களில் ஒட்டகங்களை கொல்வதற்கு சிறப்புக் குழுவையும் அவுஸ்திரேலியா அரசு நியமித்துள்ளது.

இந்நிலையில், 5 நாட்களில் சுமார் 5,000 ஒட்டகங்களை ஹெலிகொப்டரில் பறந்த படி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு வன உயிரின ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.