பிரியா பவானி ஷங்கருடன் நான் காதலா?… உண்மையை தெரிவித்த எஸ்.ஜே.!!

தமிழ் திரையுலகில் வாலி, குஷி போன்ற பல ஹிட்டான திரைப்படங்களை கொடுத்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவருக்கென தனியொரு ரசிகர் கூட்டம் உள்ள நிலையில், பின்னாளில் ஏற்பட்ட தீவிர ஆசையால் நியூ, அன்பே ஆருயிரே, இசை, வியாபாரி மற்றும் திருமகன் போன்ற படத்தில் நடித்திருந்தார்.

இது போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வெளியான இறைவி திரைப்படத்தின் மூலமாக நல்லதொரு பெயரை மீண்டும் தனக்கென தக்க வைத்துக்கொண்டார்.

நான் ஹீரோ மற்றும் கிடையாது.. வில்லனும் தான் என்று விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ரசிகர்களை மிரட்டி வைத்திருந்தார். இவ்வாறாக பல திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில், இறுதியாக மான்ஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்த நிலையில், பிரபல இயக்குனரான ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் பொம்மை திரைப்படத்தின் மூலமாக இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

இந்த நேரத்தில், எஸ்.ஜே.சூர்யா பிரியா பவானி சங்கரிடம் காதலை தெரிவித்து, இந்த காதலை பிரியா தரப்பில் இருந்து நிராகரிப்பு செய்ததாக தகவல்கள் அடுத்தடுத்து பரவியது.

இதனை கண்ட எஸ்.ஜே. தனது ட்விட்டர் பக்கத்தில், ” பிரியாவிடம் நான் காதலை வெளிப்படுத்தியது மற்றும் பிரியா மறுப்பு தெரிவித்ததாக தொடர்ந்து அவதூறு தகவல் பரவி வருகிறது. அவர் எனக்கு நல்ல நண்பராக இருந்து வருகிறார்.. தயவு செய்து இது போன்ற தவறான தகவலை பரப்பாதீர்கள் ” என்று தெரிவித்துள்ளார்.