தமிழர்களின் பெருமை பேசும் பிரித்தானியா பிரதமர்!

உலகமெங்கும் தமிழர்கள் தைப்பொங்கல் தினத்தை மிக உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

பாரம்பரிய முறைப்படி இன்றைய தினத்தில் புது அரிசியில் பொங்கலிட்டு கடவுளுக்கு படைத்து உறவுகளுடன் கொண்டாடினர்.

மக்களுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை கூறிய நிலையில் பிரித்தானியாவின் பிரதமரான போரிஸ் ஜான்சன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கு எனது தைப்பொங்கல் வாழ்த்துக்கள் என தொடங்கும் அந்த வீடியோவில்,தமிழர்கள் பிரித்தானியாவுக்கு ஆற்றிய பங்களிப்பு பற்றி பேசியுள்ளார்.

இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.