முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலையாக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் பொலிசாரை அறிவுறுத்தியுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 111 (சி) பிரிவின் கீழ் நீதிபதிகளின் செயல்பாடுகளில் தலையிட்ட குற்றச்சாட்டில் ஞ்சன் ராமநாயக்கவை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.