மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து இன்னொரு படத்திற்கு தாவிய விக்ரம்!

விக்ரம் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் தயாராகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தை மணிரத்னத்துடன் இணைந்து லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரியாஸ்கான் என பலர் நடித்து வருகின்றனர்.

இதற்கிடையில் இமைக்காநொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.

விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் தனக்கான சில காட்சிகளை முடித்துவிட்டு தற்போது கோப்ரா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதனை விரைவில் முடித்து விட்டு மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைய உள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.