உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் 6 மாகாணங்களை குறிவைத்து நேற்றைய தினம் டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் ரஷிய ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன் மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில், இன்று (07) உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள கார்கிவ் நகரம் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.