கள்ளகாதலில் ஈடுபட்ட எஸ்.ஐ, படம் பிடித்த கணவன்.!

காவல் உதவி ஆய்வாளருடன் தவறான உறவை வைத்துக் கொண்டு, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரித்துவிட்டதாக மனைவி மீதும், அந்த தவறான உறவை தட்டிக் கேட்டதற்காக கொலை மிரட்டல் விடுத்ததாக உதவி ஆய்வாளர் மீதும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில ஒருவர் புகார் அளித்துள்ளார்.

சென்னை கே.கே. நகரை சேர்ந்தவர்கள் ஜனார்த்தனன், நர்மதா தம்பதி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சவூதியில் பணிபுரியும் ஜனார்த்தனன் வெளிநாடு வாழ் இந்தியர் ஆவார். கடந்த ஆண்டு மே மாதம் சவூதி அரேபியாவில் இருந்து ஜனார்த்தனன் சென்னைக்கு திரும்பி உள்ளார்.

இந்நிலையில், ஜனார்த்தனன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது மனைவி நர்மதா, திருநின்றவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், நர்மதாவுக்கும் திருநின்றவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் என்பவருக்கும் தவறான உறவு இருப்பதாகவும், அதனை தட்டிக்கேட்டபோது காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார்.

ராயலா நகர் அருகே உள்ள பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நர்மதாவும், உதவி ஆய்வாளர் ராஜேஸும் தனிமையில் சந்தித்தபோது அவர்களை பின் தொடர்ந்து புகைப்படம் எடுத்ததாகவும், இதை பார்த்த உதவி ஆய்வாளர் ராஜேஷ் தம்மை மிகக் கடுமையாக தாக்கியதாக ஜனார்த்தனன் கூறியுள்ளார்.

மேலும், தனது குழந்தைகள் பெயரில் வாங்கிய 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உதவி ஆய்வாளருடன் சேர்ந்து நர்மதா அபகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.