ஆபிரிக்காவுக்கான விசேட தூதுவராக வேலுப்பிள்ளை கணநாதனை நியமித்த மகிந்த!

ஆபிரிக்காவுக்கான விசேட தூதுவராக வேலுப்பிள்ளை கணநாதனை பிரதமர் மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, வேலுப்பிள்ளை கணநாதனுக்கான நியமனப் பத்திரத்தை இன்று அலரி மாளிகையில் வைத்து கையளித்துள்ளார்.

வேலுப்பிள்ளை கணநாதன் உகாண்டாவில் இலங்கையின் கெளரவ தூதுவராக கடமையாற்றும் அதேவேளை அவர் உகண்டாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர் ஸ்தானிகர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

பிரபல தொழிலதிபரான கணநாதன், உகாண்டாவை வதிவிடமாக கொண்டுள்ளார். இவர் பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி மற்றும் புனித ஜோசப்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.