புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபரீதம்…

உலகம் முழுவதும் இன்று புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடினார்கள். அந்த வகையில் இந்திய முழுவதும் புத்தாண்டை இன்று நள்ளிரவு 12 மணிக்கு பொது இடங்களில் மக்கள் கூடி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டார்கள்.

அந்த வகையில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது லிப்ட் ஒன்று அறுந்து விழுந்த விபரீதத்தில் கட்டுமான நிறுவன அதிபர் அவரது குடும்பத்தினருடன் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

பிஏடிஎச் இந்தியா என்ற பிரபல கட்டுமான நிறுவன அதிபர் புனீத் அகர்வால், இந்தூர் அருகே படல்பானி கிராமத்தில் இருக்கும் பண்ணை வீட்டில் நேற்று அவரது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது. மேலும், அந்த கிராமத்தின் இயற்கை அழகை ரசிக்கும் பொருட்டு, கட்டுமானத்துக்காக வீட்டின் வெளிபுறம் அமைக்கப்பட்டிருந்த லிப்டில் ஏறி மேலே சென்றதாகவும் கூறப்படுகிறது.

அந்த சமயத்தில், லிப்ட் திடீரென 70 அடி உயரத்தில் இருந்து திடீரென அறுந்து விழுந்தது. இந்த விபரீத செயலால், லிப்டில் இருந்த புனீத் அகர்வால், அவரது மகள், மருமகன், பேரன் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.