சென்னை அரசு மருத்துவமனையில் பரிதவிக்கும் பிரபல தமிழ் நடிகை..

மலையாளத்தில் காபூல்வாலா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷர்மிளா. இவர் தமிழில் நல்லதொரு குடும்பம், உன்னை கண் தேடுதே, இவன் வேற மாதிரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஷர்மிளாவுக்கு ஆர்த்தோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளார். காலில் அடிபட்டு மருத்துவமனைக்கு வந்த ஷர்மிளாவை மருத்துவர்கள் அட்மிட் ஆக கூறியுள்ளனர்.

முதலில் தயங்கிய பின்னர் சிகிச்சை பெற்றுள்ளார். அவர் அங்கு தங்கி சிகிச்சை பெற்று இருந்தபோது அக்கம்பக்கத்தில் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். அப்படி இருந்தபோதும் ஒரு சிலர் நடிகை என கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் அவரை காண யாரும் வரவில்லை. ஷர்மிளா இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுக் கொண்டார். தற்போது பட வாய்ப்பு ஏதும் இல்லாமல் குழந்தைகள்ளுடன் கஷ்டப்பட்டு வருகிறார்.