வவுனியாவில் கோடிக்கணக்கான சட்ட விரோத கெரோயினுடன் சிக்கிய நபர்!

வவுனியாவில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கெரோயின் போதைப்பொருளை பேருந்தில் கடத்திச் சென்ற நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி சென்ற பேருந்தை நேற்று இரவு 10.30 மணியளவில் செட்டிகுளம் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் வழிமறித்த இராணுவம் மற்றும் ,பொலிஸார் அதில் சோதனைகளை மேற்கொண்ட போது ஒரு கிலோ கெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேகத்தில் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் முழங்காவில் பூநகரியை சேர்ந்த 24 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் கடந்த நான்கு தினங்களிற்கு முன்னரே மத்திய கிழக்கு பகுதியில் இருந்து இலங்கை வந்ததுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட கெரோயின் போதை பொருளின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் என பொலிசார் தெரிவித்ததுடன் கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.