நடிகை சின்மயிக்கு அண்மையில் 96 படத்திற்காக சிறந்த பாடகிக்காக விருது கொடுக்கப்பட்டது. இது அவருக்கும் அவரின் ரசிகர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி. மேலும் அவரின் கணவர் ராகுலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டதும் அவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. இது ஒரு பக்கம் இருக்க அவர் பலர் விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகீறார். குறிப்பாக பெண்கள் நீதிக்காக.
தற்போது குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் செய்து வருவதை நடிகர் ஒய் ஜி மகேந்திரன் விடுமுறை கிடைக்கும், பெண்களை சைட் அடிக்கலாம் என போராட்டத்திற்கு வருகிறார்கள், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் பாடகி சின்மயி, இது போன்ற கருத்துக்களை நாம் கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டும், இவர்களை எல்லாம் திருத்த முடியாது, அப்படி முயற்சித்தால் நேரம் வீணாகும் என தெரிவித்துள்ளார்.
சின்மயியின் இந்த பதிவிற்கு ஆதரவு குவிந்து வருகிறது.
I think we should all generally ignore comments from these men. They cant be changed. And its a waste of time. https://t.co/PYPzs8XHaX
— Chinmayi Sripaada (@Chinmayi) December 22, 2019