சினிமா மோகம்.. கற்பழித்த துரோகிகள்..கதறி அழுத பெண்!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி 5 சிறுமிகள் சினிமா ஆசையோடு வீட்டை விட்டு வெளியேறி ரயிலில் பயணம் செய்துள்ளனர். அப்போது இரு இளைஞர்கள் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்க நாங்கள் மும்பைக்குச் செல்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர்களை விசாரித்து அவர்கள் சினிமா மோகத்தில் இருப்பதை தெரிந்து கொண்ட அவர்கள் தன்னை டிக்கெட் பரிசோதகர் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டு தனது சினிமாவில் நிறைய பேரை தெரியும் வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து இருக்கின்றனர்.

இதன் காரணமாக 4 சிறுமிகள் மறுப்பு தெரிவித்து விட ஒரு சிறுமி மட்டும் அவர்களுடன் சென்றுள்ளார். மும்பையில் இருந்த ஒரு ஓட்டலில் அந்த சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளார். பின்னர் அதிகாலை எழுந்து பார்த்தபோதுதான் நிர்வாண கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை எண்ணி அழுதுள்ளார்.

அந்தப் பெண்ணை ஒரு விபச்சார கும்பலிடம் விட்டு விட்டு இருவரும் தப்பி இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் நவம்பர் 15 ஆம் தேதி தனது வீட்டிற்கு திரும்பிய சிறுமி காவல்துறையிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

ஆனால், இந்த விசாரணையில் காவல்துறையினர் தீவிரம் காட்டவில்லை என்று கூறி சிறுமி தன்னுடைய பெற்றோருடன் சேர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு முன்பே விஷம் கொடுத்து இருக்கின்றனர். தற்போது அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருக்கின்றனர்.