கணவனால் மனைவிக்கு ஏற்பட்ட கொடூரம்..!

விருதுநகர் மாவட்டத்தில் 1 வருடமாக குழந்தையில்லாத காரணத்தால் மனைவியை எரித்து கொலைசெய்ததாக கணவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் பாண்டிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார்(25). இவர் கடந்த ஆண்டு பானுரேகா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், திருமணமாகி 1 வருடமாகியும் குழந்தை பிறப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று கணவன் மனைவிக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ராம்குமார் பானுரேகாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, விராலிமலை அருகே திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் பானுவின் உடலை கொண்டு சென்று இருசக்கர வாகனத்த்திலிருந்த பெட்ரோலை வைத்து தீ வைத்து எரித்துள்ளார்.

இந்நிலையில், பானுவின் உடல் எரிந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் உடனடியாக அவர்கள் விசாரணையில் ஈடுபட்டபோது, ராம்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் மேற்கூறப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.

காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் இந்த சம்பவமானது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.