கிஸ் வேணுமா?

தென்னிந்திய திரையுலகில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பலரது மறுபுறத்தை காண்பித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும், பலர் மீது பரபரப்பாக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

இதனால் திரையுலகமே கதிகலங்கியிருந்த நிலையில், அடுத்ததாக யாரை? குறிவைக்க போகிறார் என்ற பயத்திலேயே திரையுலகம் இருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் உதயநிதியுடன் நட்சத்திர விடுதியில் உல்லாசமாக இருந்ததாகவும்., இதற்கு பட வாய்ப்பு எனக்கு தருவதாகவும் கூறி உதயநிதி தன்னை ஏமாற்றியதாக தெரிவித்து பரபரப்பை கிளப்பினார்.

இந்த பதிவு இணையத்தில் வெளியாகி பெரும் பிரச்சனையாகி இருந்த நிலையில், இது தன்னுடைய கணக்கு அல்ல என்றும், இதனை யாரோ வேண்டுமென்றே செய்துள்ளார்கள் என்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்து பின்னர் பரபரப்பை குறைத்தார்.

இந்நிலையில், ஸ்ரீரெட்டி தன்னுடைய முகநூல் பக்கத்தில் கிஸ் வேணுமா..? ஆனா,பிரஷ் பண்ணவே இல்ல என்று கூறி மோசமான கவர்ச்சி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.