நித்யானந்தாவின் தனிச்செயலராக இருந்தவர் ஜனார்த்தன சர்மா. இவருக்கு 4 மகள்கள் இருப்பதாகவும், நித்யானந்தாவின் ஆசிரமத்தில் நம்பி சேர்த்துள்ளார். இரண்டாவது, மூன்றாவது மகள்கள் இருவரும் குஜராத்தில் இருக்கும் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் தன் மகள்கள் நித்யானந்தாவிடம் பாலியல் துன்புறுத்தலில் கஷ்டப்படுவதாக சமீபத்தில் ஜனார்த்தன சர்மாவும் அவரது மனைவியும் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் இதற்கு அவரது இளையமகள் அப்படியெல்லாம் இல்லை என்று பகிரங்கமாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
என் குடும்பத்திற்கு சுமாமி பல உதவிகளை செய்துள்ளார். என் தந்தையின் இருதநோய்க்கும், படிப்பிற்கு உதவியுள்ளார். என் தந்தை தனிச்செயலராக இருக்கும் போது பண மோசடி செய்துள்ளார். இதை மறைக்க என் தந்தை சுமாவிஜி மீது பாப்ஷோ என்று ஆட் மூலம் பொய் புகார் அளிக்க வற்புறுத்தினார்.
இதற்கு நான் மாட்டேன் என்று கூறி என் தந்தையின் சுயரூபத்தை வெளியில் சொல்ல நானும் என் அக்காவும் முடிவு செய்தோம். எங்களை கடத்திவிட்டதாக என் தந்தையும் தாயும் இப்படி கூறுவது தவறானது.
மேலும் வெளிநாட்டில் இருக்கும் ஜனார்த்தன சர்மாவின் மூத்த மகள் நித்தய தத்துவப்ரியா, என் தந்தை நிர்வாகம் தெரிவிக்கும் ஒப்பந்த முடிவை அவரது நண்பர்களுக்கு கூறியுள்ளார். நிவாக ஒப்பந்த தொகஒபற்றி யாரிடமும் சொல்ல கூடாது. அதை மீற் என் தந்தை கூறியது தவறான ஒன்று என்று கூறியுள்ளார்.
இப்படி தந்தை கூறுவது உண்மையா? பொய்யா? என்றும் மகள்கள் நித்யானந்தாவின் லீலைகளை மறைக்க இப்படி தந்தைக்கு எதிராக கூறுவது உண்மையா? என்று குஜராத் போலிசார் குழப்பத்தில் இருக்கிறார்கள்.