நீண்ட காலமாக தமிழ்த் திரையில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு வேகமாக முன்னேறியவர்தான் இந்த நடிகர். என்னதான் முன்னணி நடிகராக திகழ்ந்தாலும், எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் தன்னுடைய ரசிகர்களுடன் எளிமையாக பழகுவது.
தான் முன்னேற காரணமாக இருந்தவர்களை முன்னேற்றி விடுவது, தமிழக மக்கள் பிரச்சனைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுப்பது என்று மக்களை நாயகனாகவே அவர் இருந்தார். விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் குரல் கொடுப்பது சிறு, குறு தொழில்களையும் தொழிலாளர்களையும் ஆதரவாக பேசி கைகொடுப்பது என மக்கள் கொண்டாடும் நடிகராக இருந்தவர், தற்போது மக்களாலேயே விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இதற்குக் காரணம் அவர் மக்கள் நலன் கருத்துக்களுக்கு எதிராக சிறு தொழில்களை பாதிக்கும் பன்னாட்டு நிறுவன விளம்பர படமொன்றில் நடித்தது தான். எப்பொழுதும் மக்களுக்கு ஆதரவாக செயல்படும் நடிகர், இப்படி நடந்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பலருக்கும் உதவி செய்யப்போய் அவர் கடனாளியாக மாறி இருக்கின்றார். இதனால் தான் கிடைக்கும் சிறு வாய்ப்புகளையும் விடாது இதுபோன்ற விளம்பர படங்களில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.