ஒட்டு மொத்த சினிமாவையே மிரட்டும் அஜித் ! இறங்கி அடிக்கும் தல!

வலிமை படத்தின் கதை இதுதான் என்று இப்போது சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரளாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் இப்போது நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் இணைந்து உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் துவங்க உள்ளது.

இந்த படத்திற்காக தல அஜித் ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்து தன்னை மேலும் மேலும் செதுக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா ம்யூசிக் கம்போஸ் செய்யும் இந்த படத்திற்கு தோட்டா தரணி ஆர்ட் டைரக்டராகவும், நிரவ் ஷா சினிமட்டோகிராஃபராகவும் வொர்க் செய்ய இருக்கின்றனர். இப்போதில் இருந்தே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் வலிமை படத்தின் கதை இதுதான் என்று இப்போது ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிக வைரளாக பரவி வருகிறது. வலிமை படத்தில் தல அஜித் சிலை கடத்தல் பிரிவில் முக்கிய அதிகாரியாக நடிக்க இருப்பதாக படக் குழுவின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட நமது பாரம்பரிய சிலைகளை அதிரடியாக மீட்டு கொண்டுவருவது தான் தல அஜித்தின் கதாப்பாத்திரம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டும் இல்லாமல் சர்வதேச தீவிரவாதி ஒருவரை பிடிக்க தமிழக போலீசார் சார்பில் ஒரு டீம் அமைக்கப்படுவதாகவும், அந்த டீமில் தல அஜித் தலைமையில் மொத்தமாக 6 பேர் இருப்பதாகவும், அதில் 4 பேர் பெண்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் தல அஜித் தலைமையில் அந்த 4 பெண் அதிகாரிகளாக நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் தான் நடிக்க இருப்பதாக நம்பத் தகுந்த சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டும் இல்லாமல் வலிமை படத்தில் அண்ணன் – தம்பி சென்டிமெண்ட் இருப்பதாகவும், தல அஜித் டூயல் ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரளாக பரவி வருகிறது. இது தல ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மேலும் இந்த படம் வினோத் படம் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்டத்தில் உள்ளது.

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் இரண்டு படங்கள் வெளிவந்தது.

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, இந்நிலையில் வலிமை படத்தில் ஹீரோயினாக நடிப்பது யார் என்று பெரிய விவாதமே நடந்து வருகின்றது.

நயன்தாரா பெயர் முதலில் அடிப்பட, தற்போது ராகுல் ப்ரீத் சிங் அவர்களிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

மேலும், இந்த ஜோடி ஓகே ஆனால், முதன் முறையாக அஜித்-ராகுல் ப்ரீத் நடிப்பதாக இருக்கும், வினோத் இயக்கிய தீரன் படத்தில் ராகுல் ப்ரீத் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.