திருமணமான கொஞ்ச நாளிலே விவாகரத்து கேட்டு மல்லுக்கு நிக்கும் மனைவி காரணம் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிக் அப் டிராப் என நடிகைகளுடன் ஜாலியாக ஊர் சுற்றி வந்த நாயகன் பிறரது வயிற்றெரிச்சலை கொட்டி கொண்டதன் பலனாகவோ என்னவோ தற்பொழுது படாத பாடு பட்டு வருகிறார்.

உடன் நடிக்கும் ஒவ்வொரு நடிகையுடன் ஜாலியாக ஊர் சுற்றி, காதலர்களை மிஞ்சும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் அவர்களை கொஞ்சி, சிங்கிள் பாய்சை கண்ணீர் விட வைத்ததன் சாபமோ என்னமோ, திருமணத்திற்கு பின் அவர் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறார்.

விஷயம் என்னவென்றால், நாயகி ஒருவரை காதலித்து திருமணம் செய்த அவர், ‘திருமணத்திற்கு பின்பும் நடிக்கலாம்’ என பச்சை கொடி காட்டி விட்டு, நடிகைக்கு தெரியாமல் அவருக்கு வரும் வாய்ப்புகளை கெடுத்து விட்டு கொண்டிருக்கிறாராம்.

இந்த விஷயம் மனைவியின் காதுக்கு செல்ல, பயங்கர கோபமான அவர், ‘இனிமேல் என் நடிப்புக்கு தடையாக இருந்தால் விவாகரத்து கேட்டு கோர்ட் வாசல் ஏறுவேன்’ என நாயகனை மிரட்டி வைத்திருக்கிறாராம்.