மனைவியை மிரட்ட கணவன் செய்த விளையாட்டு.. விபரீதத்தில் முடிந்த பெரும் சோகம்..!

இந்த உலகில் பலரும் பல விதமான துயரத்தில்., கொடூரத்தில் பரிதாபமாக தங்களின் உயிரை இழந்து வருகின்றனர். மேலும்., பலர் தங்களின் வாழ்நாட்களை உயர்த்தப்போகிறது என்று எண்ணி இணையதளங்களில் கிடைக்கும் லைக்குகளை பெற உயிரை பணயம் வைக்கின்றனர்.

இதனால் பரிதமான சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதனைப்போன்ற ஆபத்து என்று அறிந்தும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் ஓடும் இரயில் ஏறுவது., இரயில் வரும் வழியில் செல்ஃபீ எடுத்தும் தங்களின் உயிரை இழந்து வருகின்றனர்.

இந்த நிலையில்., தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி பகுதியை சார்ந்தவர் கண்ணன் (வயது 25). இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில்., தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இவர் தினமும் மது அருந்திவிட்டு வருவதை கண்ணனின் மனைவியான பிரியங்கா தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். இதனால் தொடர்ந்து அவமானத்தால் குறுகி வந்த கண்ணன்., தனது மனைவியை மிரட்டும் பொருட்டு உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளார்.

இந்த விளையாட்டு மிரட்டலானது விபரீதமாகவே உடலில் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனையடுத்து இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மதுரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதமபாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.