கார்த்திகை மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா?

கார்த்திகை மாதத்தில் சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்வதால், இம்மாதத்திற்கு விருச்சிக மாதம் என்றும் பெயருண்டு. கார்த்திகை மாதத்தில் பெரும்பாலும், கருமேகங்கள் சூழ்ந்துகொண்டு அதிகளவு மழைபொழிவை தரும். இதனாலும் இம்மாதத்திற்கு கார்த்திகை என்று பெயர் வந்தது எனலாம். கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் சூரியன் உதயமாகும் நேரத்தில், காவிரியில் நீராடுவது சிறப்பாகும். இதற்கு முடவன் முழுக்கு என்று முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர். ஐப்பசி மாதத்தில் நீராட முடியாதவர்கள் கூட, கார்த்திகை முதல் நாளில் காவிரியில் நீராடினால், ஐப்பசியில் துலாஸ்தானத்தில் நீராடிய பலன் கிட்டும்.

கார்த்திகை மாதம் விரத மாதம் ஐயப்ப, முருக பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருப்பார்கள். இந்த மாதத்தில் அசைவு உணவுகளை உண்பவர்கள், மறு ஜென்மத்தில் புழு பூச்சிகளாக பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம், கலியுக தெய்வமான முருகன் மற்றும் ஐயப்பனுக்கு மட்டும் பிடித்த மாதம் கிடையாது. காக்கும் கடவுளான விஷ்ணு, அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்கும் உகந்த மாதமாகும். கார்த்திகை மாதத்தில், சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதால், சந்திரனின் ஒளி மிகவும் குளிர்ச்சியாகவும், அதிக பிரகாசத்துடனும் இருக்கும். இதன் காரணமாகவே, மற்ற மாத பவுர்ணமியை விட கார்த்திகை பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பொதுவாக தமிழ் மாதங்கள் அனைத்துமே, அந்தந்த மாதங்களில் வரும் பவுர்ணமி தினத்தன்று எந்த நட்சத்திரத்தின் அருகில் சந்திரன் இருக்கிறதோ, அந்த நட்சத்திரன் பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. அதே போல், ஒவ்வொரு மாதத்திற்கு பல்வேறு சிறப்புகளும், கோவில்களில் பல்வேறு திருவிழாக்களும், பண்டிகைகளும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கார்த்திகை மாதம்

கார்த்திகை மாதம் என்றாலே இந்துக்கள் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது, அதிலும் ஐயப்ப பக்தர்களுக்கும், முருக பக்தர்களுக்கும் நினைவுக்கு வருவது மாலை போட்டு விரதமிருப்பது தான். கார்த்திகை 1 ஆம் தேதி விடிந்த உடனே, ஐயப்ப பக்தர்களும், முருக பக்தர்களும் அரக்க பறக்க குளித்து முடித்து அருகிலுள்ள கோவில்களுக்கு சென்று, குருசாமியின் கையால் பயபக்கியுடன் மாலை போட்டுக் கொள்வதுதான். இது காலம் காலமாக நடந்து வருவது தான். இவை தவிர கார்த்திகை மாதம் எவ்வளவு புனிதமான மாதம் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அசைவம் கூடாது

கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்மஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள் என்பது ஐதீகம். மேலும் இம்மாதத்தில் அசைவு உணவுகளை உண்பவர்கள், மறு ஜென்மத்தில் புழு பூச்சிகளாக பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபம்

கார்த்திகை மாதத்தில் ஆலயங்களிலும் தீபம் ஏற்றி வைப்பதும், வீடுகளில் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் விளக்கேற்றி வைப்பதும், அனைவரது வாழ்க்கையையும் ஒளிமயமாக்கும். இம்மாதம் முழுவதும் விளக்கேற்ற முடியாதவர்கள், துவாதசி, சதுர்த்தசி மற்றும் பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது தீபமேற்ற வேண்டியது அவசியமாகும்.

கிரிவலம்

படைப்பு கடவுளான பிரம்மாவுக்கும் காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டியில், எம்பெருமான் ஈசன் ஆதியந்தம் இல்லாமல் ஜோதி வடிவாக நின்று காட்சியளித்த மாதம். அந்த நாளே கார்த்திகை தீபத் திருநாளாக இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்மாதத்தில் கிரிவலம் வருவது மிக சிறப்பானதாகும்.

மேலும், கிரிவலம் வரும்போது மழை பெய்தால் அந்த மழையில் நனைந்தபடியே கிரிவலம் வந்தால் தேவர்களின் முழு ஆசியும் கிட்டும். கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தன்று அனைத்து தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதாக புராணங்கள் சொல்கின்றன. அதோடு மஹாவிஷ்ணுவோடு மஹாலட்சுமியும் கிரிவலம் வருவதாக ஐதீகம்.