இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசியெறிந்த கொடூரன்கள்.!

இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள குர்தா மாவட்டத்தில் இருக்கும் இளம்பெண்., அங்குள்ள கல்லூரிக்கு அருகில் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். மேலும்., இவரின் ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில்., படுகாயத்துடன் இருந்துள்ளார்.

இவரை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., பெண்ணின் உடலை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தற்போது இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில்., காவல் துறையினருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். இவரது வாக்குமூலத்தில் கல்லூரிக்கு செல்ல பெருந்திற்க்காக காத்திருந்த சமயத்தில்., அவ்வழியாக காரில் வந்த நபர்கள் உதவி செய்வதாக கூறியுள்ளனர்.

சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்ல நேரமானதால் காரில் சென்றுவிடலாம் என்று எண்ணிய நிலையில் காரில் சென்ற தருணத்தில்., என்னை காரில் இருந்த இருவரில் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் என்னை சாலையில் வீசியெறிந்து சென்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ள நிலையில்., இது தொடர்பான வழக்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.