ரஷியாவில் 123 வயதான பெண் மூதாட்டி மரணம்..!!!

ரஷியாவின் அஸ்ட்ராஜன் பிராந்தியத்தில் உள்ள இஸ்லமாசி என்ற கிராமத்தில் உலகின் அதிக வயதான தான்சிலியா பிசம்பேயவா என்ற பெண்மணி வசித்து வந்தார் .

123 வயதான இவர், உலகிலேயே வயதான பெண் என்ற புகழுக்கு சொந்தக்காரர். 1896-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் திகதி பிறந்த இவர், கடந்த மார்ச் மாதம் தனது 123-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இவரிற்கு நான்கு பிள்ளைகள், 10 பேரக்குழந்தைகள், 15 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் 3 நூற்றாண்டுகளை கண்ட அவர் இறந்துவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது.

பிசம்பேயவாவின் சாதனையை முறியடித்து வாழ்ந்த பெண்ணும் ரஷியாவை சேர்ந்தவரே. அங்குள்ள கபார்டினோ பால்கரியாவை சேர்ந்த 127 வயதான நானு ஷாவோவா, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.