பிக்பாஸ் சீசன் 1 ல் வலிமையான முக்கிய போட்டியாளராக இருந்தவர் கவிஞரும் பாடலாசிரியருமான சினேகன். சில சர்ச்சைகள் அவர் மீது வந்திருந்தாலும் மக்கள் மனதில் இடம் பெற்றார்.
பல படங்களில் பணியாற்றியுள்ள இவர் சில ஹிட் பாடல்களையும் கொடுத்து வருவதோடு சில படங்களில் நடித்தும் வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் கமல் ஹாசனுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துவிட்டார்.
கட்சி பணிகளையும் ஆற்றி வரும் அவர் அண்மையில் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து இறந்த சிறுவன் சுஜித்தின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி, பெற்றோர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறியுள்ளார்
நேற்று(29-10-2019)மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பு அணி பொதுச்செயலாளர் திருமதி @umadevivnm மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு @SnehanOfficial ஆகியோர் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் வீட்டிற்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து,சுஜித்திற்கு அஞ்சலி செலுத்தினர் pic.twitter.com/ZlBrvOpDLw
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) October 30, 2019