கொலையான கணவன்.. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மனைவி… !!!

இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள விதிஷா மாவட்டத்தில் இருக்கும் ஆலம்பூர் கிராமத்தை சார்ந்தவர் ராஜேஷ். இவர் தீபஒளித் திருநாளில் தனது நண்பர்களான அணில் குஷ்வஹா., மனோஜ் அஹீரிவாரின் இல்லத்திற்கு மது விருந்திற்க்காக சென்றுள்ளார். இதனையடுத்து அனைவரும் மது அருந்திய நிலையில்., சுனில் மற்றும் மனோஜ் ஆகியோர் சேர்ந்து ராஜேஷின் மனைவியிடம் அத்துமீறி சில்மிஷம் செய்துள்ளனர்.

மேலும்., அவரை வீட்டிற்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததை அடுத்து., தனது மனைவியை காக்க நண்பர்களிடம் போராடிய நிலையில்., ராஜேஷை அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் ராஜேஷின் மனைவியை பாலியல் கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்து தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ராஜேஷின் உடலை கைப்பற்றிய நிலையில்., பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அவரின் மனைவியையும் அவசர ஊர்தியின் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தருணத்தில்., அங்குள்ள லத்தேரி பகுதியில் இருந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை..

இதனால் அங்கிருக்கும் 34 கிமீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில்., அங்கும் மருத்துவர்கள் இல்லை என்பதால்., பின்னர் அங்கிருந்து 28 கிமீ தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று., சுமார் இரண்டு மணிநேரம் கழித்து ராஜேஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அங்கிருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மேலும்., இறந்த கணவனுடன் – பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை எடுத்துக்கொள்ள கூட இயலாமல் சுமார் 170 கிமீ தொலைவு அழைக்கப்பளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இருவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.