காதல் கணவனுக்காக அனைத்தையும் செய்தேன்… என் நிலையை பாருங்கள்..!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா பகுதியை சார்ந்தவர் வெங்கட மகேஸ்வரா ரெட்டி. இவர் தெலுங்கானா மாநிலத்தை சார்ந்த பிரிதுல்லா பாவனா என்ற பெண்ணை 9 வருடமாக காதலித்து வந்த தருணத்தில்., பாவனாவுடைய பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த வருடம் திருமணமும் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த திருமணமானது மகேஸ்வரனின் வீட்டிற்கு தெரியாமலேயே நடந்த நிலையில்., இதனை அறியாத மகேஸ்வரனின் பெற்றோர் அவருக்கு பெண் பார்த்துள்ளனர். மேலும்., அதிகளவு வரதட்சணைக்கு ஆசைப்பட்ட மகேஸ்வரன் காதலித்து திருமணம் செய்து கொண்ட பாவனாவிடம் தொடர்ந்து விவாகரத்து கூறி மிரட்டி வந்துள்ளார்.

இந்த விஷயம் குறித்து பாவனா “மகேஷ்வராவின் இல்லத்தில் தான் ஐ.ஏ.எஸ். படிப்பை நிறைவு செய்த பின்னர் தான் திருமணத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறிய நிலையில்., அவருக்காக அனைத்தையும் செய்தேன். சிவில் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்ற நிலையில்., தற்போது அதிக வரதட்சணை காரணமாக என்னிடம் விவாகரத்து கூறுகிறார்.

இவர் மீது தகுந்த நவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தும் எந்த விதமான பதிலும் இல்லை என்று கூறி தனது முகநூலில் பதிவு செய்ததை அடுத்து., இது குறித்து அப்பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.