கிளிநொச்சியில் ரிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு – வெளியேறிய பொலிஸார்

கிளிநொச்சி, முறிகண்டி பகுதியில் ரிப்பர் வாகனம் மீது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார் தப்பியோட்டியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) இரவு மாலை 7.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்து வீதிக்கு ரிப்பர் வாகனத்தை சாரதி செலுத்திய போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

ரிப்பர் வாகனத்தின் பின் சில்லில் துப்பாக்கி சன்னம் பாய்ந்துள்ளது. இச்சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இது தொடர்பாக உடனடியாக 119 அவசர பொலிஸாருக்கு அழைத்து முறைப்பாடு செய்தபோதிலும் உடனடி விசாரணை இடம்பெறவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.