ஈராக் நாட்டில் அரசிற்கு எதிரான போராட்டமானது தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. ஈராக் நாட்டில் இருக்கும் அரசு அலுவலகங்களின் ஊழல் மற்றும் தொடர் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை., பொதுசேவை பணிகள் போன்றவற்றால் மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
இதனால் அங்குள்ள மக்கள் அனைவரும் அரசிற்கு எதிராக வீதிகளில் இரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்., அரசு பதவி விலக வேண்டும் என்ற பல கோரிக்கைகளோடு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாது புதிய அரசியலமைப்பு சட்டங்கள் குறித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.
பழமையான அரசியலமைப்பு பிரச்சனையின் காரணமாக வகுப்புவாத பிரச்சனைகள் எழுந்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ள நிலையில்., இவர்களை கட்டுக்குள் வைப்பதற்கு அரசு பாதுகாப்பு படையினரை உபயோகம் செய்துள்ளது.
இந்த சமயத்தில்., கலவரத்தில் ஈடுபடும் நபர்களை கட்டுக்குள் வைப்பதற்காக இரப்பர் பொருத்தப்பட்ட தோட்டாக்களை துப்பாக்கியில் உபயோகம் செய்து போராட்டக்காரர்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் சுமார் 21 பேர் உயிரிழந்தாகவும்., 1700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.