இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.
சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி ஆண்டுதோறும் நடக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டி முதலாவது சீசனில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக், பிரையன் லாரா, வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்தர்பால், ஆஸ்திரேலியா வீரர் பிரெட்லீ, தென்ஆப்பிரிக்கா வீரர் ஜான்டி ரோட்ஸ், இலங்கை அணியை சேர்ந்த முரளிதரன், தில்ஷன் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த 110 முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாய், சாலை பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்படும்.
சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.