உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட சர்ச்சை.!

கடந்த மே மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதின.

இறுதி போட்டியில்  இங்கிலாந்து – நியூசிலாந்து இரு அணிகளும் தலா 241 ரன்கள் எடுத்தன. இத காரணமாக வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

சூப்பர் ஓவரிலும்இங்கிலாந்து – நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளுமே 15 ரன்ளை எடுத்து சமநிலை வகித்தது. இதையடுத்து இறுதிப்போட்டி முழுவதும் இரு அணிகளும் அடித்த பவுண்டரிகள் கணக்கிடப்பட்டு, அதில் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பவுண்டரி அடிப்படையில் வெற்றியை அறிவித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முடிவுக்கு கடும் விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தற்போது உள்ள சூப்பர் ஓவர் முறையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது, இனிமேல் சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சமநிலையில் ரன் எடுத்தல் பவுண்டரி அடிப்படையில் வெற்றி முடிவு செய்யப்படமாட்டாது. அதாவது ஐ.சி.சி. 20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக கோப்பை போட்டியின் அரைஇறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் சமநிலை ஏற்பட்டால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும். அதேசமயத்தில் போட்டியில் தெளிவான முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் தொடரும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.