இளைய தளபதியின் பிகில் பட ரிலீஸிற்கு வந்த புதிய பிரச்சனை

அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகி இருக்கிறது. விளையாட்டை மையப்படுத்தி அதுவும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாகியுள்ளது.

இதனால் மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்திற்கு புதிதாக பிரச்சனை வந்துள்ளது. அதாவது உதவி இயக்குனர் செல்வா சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் அதனால் இந்த படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரனைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் இதுகுறித்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று படக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

ரிலீஸ் நேரத்தில் இந்த படத்திற்கு பிரச்சனையா என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.