இறுதி நாள் ஓட்டிங்கில் முந்திய இலங்கை பெண்! முதலிடத்தில் யார் தெரியுமா? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை !

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. நாளையுடன் யார் வெற்றியாளர் என்பது மக்களுக்கு தெரிந்து விடும்.

இதுதான் கடைசி வாரம் என்பதால் இப்போதே மக்கள் பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 3ன் வெற்றியாளர் யார் என்பது தொடர்பான நிறைய கணிப்புகள் மற்றும் விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது.

இதில் முகேன் அவருக்கு அடுத்து சாண்டி ஆகிய இருவரும் இறுதி சுற்றில் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் 4 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது நிலவரப்படி முகேன் முதலிடத்திலும், லொஸ்லியா இரண்டாவது இடத்திலும், சாண்டி மூன்றாவது இடத்திலும், கடைசி இடத்தில் ஷெரினும் உள்ளனர். தற்போது நிலவரப்படி முகேன் 43% சதவிகித வாக்குகளும், லொஸ்லியா 30% சதவிகித வாக்குகளும், சாண்டி 23% சதவிகித வாக்குகளும், ஷெரின் 6% சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதில் சாண்டி டைட்டில் வின்னர் போட்டியில் கடுமையான போட்டியாளராக இருப்பார் அல்லது இரண்டாவது இடத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது நிலவரப்படி சாண்டியை பின்னுக்கு தள்ளி லொஸ்லியா சைலண்ட்டாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது வரை முகேன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இன்னும் ஒரு நாள் இருப்பதால் இரண்டாவது, மூன்றாவது நிலையில் மாற்றம் வந்தாலும் வரலாம் என்று கூறிவருகின்றனர்.