தூத்துக்குடி சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமையில் பகீர் வாக்குமூலம்.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகேயுள்ள செவல் கிராமத்தை சார்ந்தவர் பால்வேல். இவரது மகனின் பெயர் சுரேஷ்குமார் (வயது 20). இதே பகுதியை சார்ந்த சின்னசாமி என்பவரின் மகன் இராமலிங்கம் (வயது 21)., பால்ராஜ் என்பவரின் மகன் அழகுராஜா (வயது 20)., இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த கன்னிராஜாபுரத்தை சார்ந்தவர் வாழைவெட்டி. இவரது மகனின் பெயர் இராமச்சந்திரன் (வயது 22). இவர்கள் நால்வரும் நண்பர்கள் ஆவார்கள்.

பால்வேலின் மகனான சுரேஷ்குமார் அங்குள்ள உப்பளத்தில் பணியாற்றி வரும் நிலையில்., மீதமுள்ள மூவரும் சென்னையில் இருக்கும் கடைகளில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் விருமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்த சமயத்தில்., விளாத்திகுளத்தை சார்ந்த 16 வயதுடைய சிறுமியை சுரேஷ்குமார் காதலித்து வந்துள்ளான்.

இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில்., சிறுமியின் இல்லத்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து., இருவரும் இனி காதலிக்க வேண்டாம் என்று பிரிந்துள்ளனர். இந்த தருணத்தில்., சின்னசாமியின் மகனான இராமலிங்கத்திற்கும் – சிறுமிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது., காதலாக மாறியதை அடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில்., தனது காதலியை மோட்டார் வாகனத்தில் விளாத்திகுளம் பகுதியில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு இவர்களுக்கு முன்னதாகவே தயாராக காம கொடூரன்கள் இருந்துள்ளான்கள். இவர்களை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு சிறுமி உள்ளான நிலையில்., நால்வரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இதனால் சிறுமி மயக்கமடைந்த நிலையில்., இதனால் அதிர்ச்சியடைந்த கொடூரன்கள் சிறுமிக்கு தண்ணீர் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்ற நிலையில்., இவர்களின் நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., சிறுமியை அழகுராஜா அழைத்து வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சிறுமி நடக்க கூட முடியாமல் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து., சிறுமியை மீட்ட காவல் துறையினர்., அழகுராஜாவை கைது செய்தனர். பின்னர் சிறுமியை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில்., அழகுராஜாவிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணைக்கு பின்னர் காம கொடூரன்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.