இன்று உலக அமைதி தினம்.!

உலக அமைதி தினம்:

உலக அமைதி தினம், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாள் 1981ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. பிறகு 2002ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று உலகில் பல பகுதிகளில் சமாதானத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், இன்று மட்டுமன்றி ஒவ்வொரு நாட்களுமே மனித வாழ்வில் சமாதானம் நிலைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

உலக அல்சைமர் தினம்:

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ஆம் தேதி உலக அல்சைமர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் செல்களை சிதைத்து, ஞாபக சக்தியைக் குறைத்து, நம்மை நமக்கே மறக்க வைத்துவிடும் நோய் தான், அல்சைமர். இந்நோய் 65 வயது தாண்டியவர்களை அதிகம் பாதிக்கிறது.

அல்சைமர் நோயை பற்றியும் அதனால் தொடர்புடைய முதுமை மறதியை பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.