தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ரஜினி, விஜய். இவர்கள் இருவருக்கும் தான் உலகமெங்கும் பல இடங்களில் மார்க்கெட் உள்ளது.
இந்நிலையில் ரஜினி கூடிய விரைவில் அரசியலுக்கு வருகின்றார், இதுக்குறித்து எஸ்.வி.சேகர் ஒரு பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார்.
இதில் அவர் பேசுகையில் ‘ரஜினி எப்படி அரசியலுக்கு வருகிறாரோ, அதேபோல் விஜய்யும் கண்டிப்பாக வருவார், அதற்கான வேலைகளில் அவர் தற்போது பயணித்து வருகின்றார்.
மேலும், விஜய்யை மதத்தை வைத்து பேசுவதை நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.