பிக்பாஸ் வீட்டிற்குள் சாண்டியை தேடி அலைந்த லாலா…!!

பிக்பாஸ் வீட்டில் Freeze Task மூலம் அனைத்து போட்டியாளர்களின் பெற்றோர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து சென்றனர்.

நேற்றைய தினத்தில் சாண்டியின் குடும்பம் வந்தது. அதில் லாலா-வைப் பார்த்த சாண்டி தனது அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வடித்தார்.

பின்பு தனது மனைவிக்கு டீ போட்டுக்கொடுக்கும் தருணத்தில் லாலா தன்னிடம் சேரவில்லை என்று சாண்டி சிறுபிள்ளையைப் போன்று அழுதுள்ளார்.

இதற்கு அவரது மனைவி எவ்வளவு சமாதானப்படுத்தியும் கேட்கவில்லை. ஆனால் லாலா வருவதற்கு முன்பு சாண்டி மேக்கப் எல்லாம் போட்டு பயங்கர எதிர்பார்ப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.