தந்தையை கொலை செய்த மகன்..! காரணத்தை கேட்டா அதிர்ந்திடுவீங்க..!!

இணையதள மோகத்தால் பல கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இணையத்தளம் நம்மில் பழக்கமானத்தில் இருந்து பல விதமான பிரச்சனைகள் மற்றும் கொலைகள்., கலவரங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில்., அலைபேசி இணையதளத்திற்கு கட்டணம் செலுத்த பணம் தராத தந்தையை மகன் கொலை செய்துள்ளது பெரும் அதிர்வலையை பதிவு செய்கிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காவி மாவட்டத்தில் இருக்கும் காத்தி தாலுகா பகுதியில் வசித்து வருபவர் சங்கரப்பா (வயது 59). இவருடைய மகனின் பெயர் ரகுவீர் குமார் (வயது 21). ரகுவீர் அவனது அலைபேசியில் இணையதள விளையாட்டான பப்ஜி விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளான்.

இதனை தொடர்ந்து கவனித்து கொண்டு இருந்த ரகுவீரின் தந்தை பப்ஜி விளையாட கூடாது என்று எச்சரிக்கவே., தந்தைக்கும் – மகனிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து வந்த சமயத்தில்., திடீரென அலைபேசிகான இணைய சேவையும் நாட்கள் முடிந்ததால் துண்டிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தந்தையிடம் சென்று அலைபேசிக்கு கட்டணம் செலுத்த ரகுவீர் பணம் கேட்கவே., சங்கரப்பா பணம் தர மறுத்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு., அடிதடியாக ஆனதை அடுத்து இருவரும் சண்டையிட்டுள்ளனர். இந்த சமயத்தில்., அதிகளவு ஆத்திரத்துக்கு உள்ளான ரகுவீர் அரிவாளால் தந்தையை சரமாரியாக வெட்டியுள்ளான்.

ஆத்திரம் தொடர்ந்து தீராத நிலையில்., தந்தையின் கால்கள் மற்றும் தலையை தனியாக வெட்டியெடுத்துள்ளான். சங்கரப்பாவின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து வீட்டிற்குள் விரைந்த அக்கம் பக்கத்தினருக்கு பேரதிர்ச்சி காட்சியாக சங்கரப்பாவின் கொலை இருந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., சங்கரப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ரகுவீரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.