இஷான் கிஷன் அதிவேக அதிரடி அரைசதம்!

இந்தியா ஏ தென்ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையேயான 2வது ஒருநாள் போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. மைதானத்தில் மழையின் காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தியா ஏ -தென்னாப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து 50 பேர் கொண்ட போட்டி 21 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 21 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பவுமா 40 ரன்களும் லிண்டே 52 ரன்களும் அடித்தார்கள்.

இந்திய தரப்பில் தீபக் சாகர், கலீல் அஹமட், சாஹல், அக்சார் படேல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரையும் தென்ஆப்பிரிக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி, அனைவருமே 6 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்து இருந்தனர்.

தீபக் சாகரின் முதல் இரண்டு ஓவர்களில் வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே எடுக்கப்பட, அடுத்த இரண்டு ஓவர்களில் 25 ரன்களை வாரி வழங்கிவிட்டார். இந்திய அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த அன்மோல்ப்ரீத் அடித்து விளையாட தலா 2 சிக்ஸர், பவுண்டரிகளை விளாசி 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஷுப்மன் கில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் மனிஷ் பாண்டேவுடன் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் இணைந்தார். ஒருபுறம் பாண்டே நிற்க, மறுபுறம் கிஷன் சரவெடியை வெடித்தார். அவர் 21 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். 24 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்,

பின்னர் மனிஷ் பாண்டே 13 ரன்களிலும், அக்சார் படேல் 10 ரன்களிலும், தீபக் சாஹர் 0 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் க்ருனால் பாண்டியா கைகொடுக்க இந்திய ஏ அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.