மாணவர்களை ஆசிரியர்கள் வீட்டுக்கு அழைக்கக் கூடாது!

சென்னை பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டிருப்பதாவது:

பல்கலைக்கழகத்தின் மாணவ மாணவிகள் பேராசிரியர் வீடுகளுக்கு செல்ல கூடாது. அவர்களே அழைத்தாலும் செல்ல கூடாது, அவசியம் என்றால் நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டு உரிய அனுமதி பெறவேண்டும்.

பாலியல் தொந்தரவு அற்ற வளாகமாக மாற்றும் முயற்சி இது. பாலியல் தொந்தரவு இருந்தால் பல்கலைக்கழக பேராசிரியை ரீட்டா ஜான் தலைமையிலான குழுவிடம் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

இனி மாணவர்கள் தரப்பிலோ அல்லது ஆசிரியர் தரப்பிலோ தவறு ஏற்படும் பட்சத்தில் நிர்வாகத்திடம் தெரிவித்தால் நிச்சியம் உரிய நடவேடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.