25 வயதில் 7 குழந்தைகளுக்கு தாயான இளம்பெண்!

அமெரிக்காவில் 7 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் தாய் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சகிடா ஜோன்ஸ் (25) என்ற பெண்ணுக்கு திருமணமாகி 7 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் North Carolinaவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சகிடா தனது குழந்தைகளுடன் சென்றார். அப்போது அந்த வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

அந்த சமயத்தில் தனது ஒரு குழந்தையை காப்பாற்றிய சகிடா அந்த குண்டை தன் உடலில் வாங்கி கொண்டார்.

மொத்தம் 30 முறை துப்பாக்கி குண்டு வெடித்த நிலையில் இதில் சகிடாவுக்கு மட்டுமே படுகாயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர் குழந்தைகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சகிடா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து குடும்பத்தார் கூறுகையில், மிகவும் அன்பான மற்றும் அனைவர் மீதும் அக்கறை கொண்டவராக சகிடா இருந்தார்.

இன்னும் நான்கு நாட்களில் 26வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில் அவருக்கு இப்படி ஆகிட்டது.

ஏன் அடிக்கடி துப்பாக்கியால் வன்முறை நடத்தப்படுகிறது? இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என கூறியுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இது தொடர்பில் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.