இந்த ஆண்டுக்கான வீர் சக்ரா விருது இந்திய விமானப்படையின் ‘விங் கமாண்டர்’ஆன அபிநந்தன் வர்த்தமானுக்கு வழங்கப்படலாம் என சில தகவல்கள் வெளியாகி வருகின்றது.
பாகிஸ்தானின் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக கடந்த பிப்ரவரி 27-ம் தேதி ராணுவ கவுரவ விருதான வீர் சக்ரா அபிநந்தனுக்கு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த கூடாரங்கள் மீது பாகிஸ்தானுக்குப் பதிலடி அளிக்க வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய விமானப் படை வீரர்களுக்கு ‘வாயு சேனா பதக்கம்’ வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் நடத்திய பதில் தாக்குதலின் போது பிணையாகப் பிடிக்கப்பட்டவர் அபிநந்தன். பாகிஸ்தானிடம் பிடிபட்டபோதும் தைரியத்துடன் செயல்பட்டவர் அபிநந்தன். எனவே அவரை அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலரும் பாராட்டி வந்தனர்.
சில காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வரும் அபிநந்தன், விமானப்படை விமானிக்கான ஆரோக்கிய தகுதிகளுடன் இருக்கின்றாரா என தெரிந்துகொள்ள பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவ மையத்தில் சோதனை நடைபெற இருக்கின்றது. இந்த சோதனையில் தேர்ச்சி பெற்றால் மீண்டும் தனது விமானி பணியை அபிநந்தன் தொடங்குவார் எனத் கூறப்படுகிறது.