தாயகம் திரும்பிய குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு..!!

சுவிஸிலிருந்து கடந்த பத்து வருடங்களுக்கு முன் தாயகம் திரும்பிய நபரொருவர் எடுத்த விபரீத முடிவு யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ். உரும்பிராய் பகுதியினை சேர்ந்த இராசதுரை பாக்கியராஜா கடந்த பத்து வருடங்களுக்கு முன் சுவிஸிலிருந்து இலங்கை வந்துள்ளார்.

இந்த நிலையில், தனது குடும்பத்துடன் யாழில் வாழ்ந்து வந்துள்ளதுடன், நேற்றையதினம் குடும்பத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சினை காரணமாக தனக்கு தானே அவர் தீமூட்டிக் கொண்டுள்ளார்.இந்த நிலையில் உடனடியாக அவர் தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும், 60 வயதான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் இராசதுரை பாக்கியராஜாவின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.