தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது, இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ். ‘மதராஸி’ படத்தின் கதைக்களம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், ” கஜினி படம் போலவே ‘மதராஸி’ படமும் ஒரு பழிவாங்கும் கதைதான். ஆனால், இதில் காதல் தான் மையப்புள்ளியாக இருக்கும்.
துப்பாக்கி பட நடிகர் வித்யூத் ஜாம்வால், இந்தியில் பல்வேறு முன்னணி நாயகர்களின் படங்களில் வில்லனாக நடிக்க கேட்டபோது மறுத்துவிட்டார்.
ஆனால், நான் ‘மதராஸி’ படத்திற்காக அவரை அணுகியபோது, கதை என்னவென்றாலும் நடிக்கிறேன் என்று கூறினார். இவருடைய ரோல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.







