லண்டன் மாப்பிள்ளையால் ஏமாற்றபட்ட யுவதி! கண்ணீர்க் கதை!

புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் இளைஞன் ஒருவர் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவரை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது,

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கடந்த 2010-ம் ஆண்டு வவுனியாவை சேர்ந்த 24 வயது பெண்ணொருவருக்கு லண்டன் வாழ் யாழ் இளைஞர் ஒருவரை தரகர் மூலம் பேசி, பெரும் திரளான பணமும் சீதனமாக கொடுக்கபட்டு இந்தியாவில் திருமணம் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் திருமணம் முடிந்த மூன்று மாதங்களில் பெண்ணை லண்டன் அழைப்பதாக கூறிவிட்டு மாப்பிள்ளை சென்றுள்ளார்.

லண்டன் சென்ற மாப்பிள்ளை கடந்த எட்டு வருடங்களாக இந்த வருடம் நீ வந்துவிடலாம் , இன்னும் கொண்ஞ்ச நாட்களில் வந்துவிடலாம என பல பொய்கள் தொலைபேசி அழைப்புக்களின் போது கூறி வந்துள்ளார்.

பொறுமையிழந்த குறித்த பெண் மாப்பிள்ளையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வவுனியாவுக்கு வந்து தற்பொழுது இளமையையும் தொலைத்துவிட்டு பல சோகங்களுடன் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.